18
டெல்லி, டிசம்பர் 06:
தேர்தல் ஆணையத்தில் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்ததாக அன்புமணி மீது கட்சி நிறுவனர் ராமதாஸ் சார்பாக ஜி.கே.மணி புகார் அளித்துள்ளார்
தேர்தல் ஆணையத்தில் பாமக பொதுக்குழு குறித்து போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து, கட்சியை அபகரித்ததாக பாமக தலைவர் அன்புமணிக்கு எதிராக டெல்லி காவல் ஆணையரிடம் குற்றவியல் ராமதாஸ் ஆதரவாளர் ஜி.கே. மணி புகார் அளித்துள்ளார்.
இதனிடையே, அம்பேத்கர் நினைவு நாளையொட்டி, விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ராமதாஸ், உரிமையியல் நீதிமன்றத்தில் கட்சி ரீதியான வழக்கு தொடர்வது குறித்து நாளை தெரிவிக்கப்படும் என்று கூறினார்.