பெங்களூரு , அக்டோபர் 01:
காங்கிரஸ் கட்சியின் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த தகவலை உறுதி செய்து கார்கேவின் மகனும் கர்நாடக அமைச்சருமான பிரியங்க் கார்கே தெரிவித்ததாவது: “கார்கேவுக்கு இதயத்தில் பேஸ்மேக்கர் நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர். திட்டமிடப்பட்ட அறுவைச் சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நிலையாகவும் நலமுடனும் இருக்கிறார்.” எனத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, வருகின்ற அக்டோபர் 7 ஆம் தேதி நாகலாந்தில் மிகப்பெரிய அளவில் காங்கிரஸ் கட்சியினர் ஏற்பாடு செய்திருக்கும் பொதுக் கூட்டத்தில் கார்கே கலந்துகொள்ள திட்டமிட்டுள்ளார்.
தற்போதைய அறுவைச் சிகிச்சையின் காரணமாக, அந்த பொதுக் கூட்டத்தில் கார்கே கலந்துகொள்வதற்கான வாய்ப்புகள் குறைவாகவே கருதப்படுகிறது.