ஒசூர், செப்டம்பர் 11:
இன்று ஒசூர் மாவட்டத்தில் நடைபெற்ற தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு, பல முக்கிய ஒப்பந்தங்களுக்கு கையெழுத்துவைத்தார்.
முன்னதாக, இன்று காலை சென்னையிலிருந்து முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்க ஒசூர் வந்தடைந்தார் முதல்வர் மு. க . ஸ்டாலின். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனையடுத்து, அவர் அசன்ட் சர்க்யூட் தொழிற்சாலையில் அடிக்கல் நாட்டினார். அதன் பின் குருபரப்பள்ளியில் உள்ள டெல்டா நிறுவனத்தின் இரண்டாவது அலகை தொடங்கி வைத்தார். அதன்பின் முதலமைச்சர் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசனின் தந்தை இன்று காலமான காரணத்தால், தொழில் முதலீட்டாளர் மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.