சென்னை, செப்டம்பர் 05:
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் மூலம் தமிழகத்தில் நலிந்த கலைஞர்களுக்கு மாதந்தோறும் 3,000 ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டம் செயல்பட்டு வருகிறது. தற்போது இதன் கீழ் 6,542 நலிந்த கலைஞர்கள் நிதியுதவியை பெறுகின்றனர். இந்த ஆண்டிலிருந்து கூடுதலாக 2,500 பேர் தகுதிவாய்ந்தவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு மாதம் 3,000 ரூபாய் நிதியுதவி ஆணைகள் வழங்கப்பட உள்ளது.
தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 10 நலிந்த கலைஞர்களுக்கு நிதியுதவி ஆணைகள் வழங்கி துவக்கமளித்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.மணிவாசன், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் தலைவர் வாகை சந்திரசேகர், செயலாளர் விஜயா தாயன்பன், மற்றும் பல அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
2025-26 நிதிநிலை அறிக்கையின்படி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இத்திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீட்டை வழங்கியுள்ளார். இதன்மூலம் தகுதிவாய்ந்த அனைத்து நலிந்த கலைஞர்களுக்கும் நிதி உதவி கிடைக்குமாறு தமிழக அரசு உறுதி செய்துள்ளது.
இந்த திட்டம் மூலமாக மிகை, வலிமை இழந்த நலிநிலையுள்ள கலைஞர்களை உதவி செய்து, பாரம்பரிய கலை வளர்ச்சிக்கு ஊக்குவிப்பதே நோக்கமாகும்.