வேலூர், ஆகஸ்ட் 06:
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது , தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது என்றும் இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என்றும் தெரிவித்தார்.. போதைப்பொருள் பயன்பாடு அதிகமாக உள்ளது. சட்டம் ஒழுங்கை கையில் வைத்து இருக்கும் ஸ்டாலின், இதை சரியாக கையாண்டு சீர் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாகவும். ஆணவப்படுகொலைகளை கட்டுப்படுத்த தனி சட்டம் வரவேற்கத்தக்கது என்றும் பிரேமலதா தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், நடிகர் விஜயகாந்தின் படத்தை எந்த அரசியல் கட்சியும் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தக் கூடாது என தெரிவித்தார். மேலும் கூட்டணிக்கு வரும் போது மட்டுமே, தேவையான விவகாரங்களில் மட்டும் தான் விஜயகாந்த் படத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அவர் கூறினார். மேலும், சினிமா துறையில் யாரும் வேண்டுமானாலும் விஜயகாந்தின் புகைப்படத்தை பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளார்.