பெங்களூரு, ஜூலை 26:
பெங்களூருவில் உள்ள பிரபலமான சின்னசாமி கிரிக்கெட் மைதானம் பெரிய அளவிலான நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பான இடமாக இல்லையென்று கர்நாடக அரசு அமைத்த தனிநபர் விசாரணை ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கைக்கு முக்கிய காரணம் தற்போது நடந்த ராயல் சேலன்ஜர்ஸ் பெங்களுரு அணியின் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலாகும். 2025 ஆம் ஆண்டு ஜூன் 4-ஆம் தேதி, ஆர்சிபி அணி முதன்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றதை கொண்டாடும் நிகழ்ச்சி எம்.சின்னசாமி மைதானத்தின் வாயில் மற்றும் சுற்றுப்புறங்களில் சுமார் 3 லட்சம் ரசிகர்கள் திரண்டனர். அதனிடையே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் துரதிருஷ்டவசமாக 11 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து கர்நாடக அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட்டது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
விசாரணை ஆணையத்தின் அறிக்கையில், சின்னசாமி மைதானம் பெரிய அளவிலான கூட்ட நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் போதுமானவையாக இல்லை என்று கண்டறிந்தது. மைதானம் பொதுமக்களுக்கு அதிக ஆபத்துக்களை ஏற்படுத்தும் வகையில் உள்ளது எனவும், அதனை பாதுகாப்பானதும் தகுதியானதும் எனக் கருதுவதில் பிழைபட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த அசம்பாவிதத்தை தடுக்க தவறிய பெங்களூர் மாநகர காவல் ஆணையர் உள்ளிட்ட சில காவல் அதிகாரிகள் பணிநீக்கம் செய்துள்ளனர்.
இந்த அறிக்கை காரணமாக, எதிர்காலத்தில் 2025 ஐசிசி மகளிர் உலகக் கோப்பை தொடக்கம் மற்றும் இறுதிப் போட்டிகள் எம்.சின்னசாமி மைதானத்தில் நடத்தப்படுவதில் சந்தேகங்கள் எழுந்துள்ளன. அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் பிரீமியர் லீக் போட்டிகளும் சின்னசாமி மைதானத்தில் நடத்தப்பட வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது. கர்நாடக அரசு, மைதானத்தின் பாதுகாப்பு நிலையை மேம்படுத்தும் வரை பெரிய கூட்ட நிகழ்ச்சிகளை மாற்றும் முனையில் இருக்கிறது. இதனால் சின்னசாமி மைதானம் எதிர்கால விளையாட்டு மற்றும் கலை விழாக்களுக்கு இடமாற்ற ஏற்பட வாய்ப்பு உள்ளது.