விழுப்புரம் , ஏப்ரல் 11:
விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சிவகுமாரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் அன்புமணி பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது:
- எடப்பாடி பழனிசாமி முதல்வரானதும் வேளாண் துறையைப் போல நெசவுத்துறைக்கும் தனி பட்ஜெட் போடப்படும்.
- வன்னியர்களுக்கு 15% இடஒதுக்கீடு கொடுப்பதாக 2019-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் சொன்னதை ஸ்டாலின் நிறைவேற்றவில்லை.
- பெரும்பான்மையான வன்னியர், பட்டியல் சமுதாய மக்கள் அடித்துக்கொண்டால் குளிர் காயலாம் என திமுக நினைக்கிறது.
- இன்றைய இளைஞர்கள் தெளிவாக உள்ளனர். திமுகவின் கனவு பலிக்காது என்று அவர் கூறினார்.
