திருச்சி, ஏப்ரல் 01:
திருச்சி உழவர் சந்தை பகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளர் என பிரதமர் ஒரு முறையாவது கூறினாரா?
- எம்எல்ஏக்களை ஏலம் எடுத்து முதலமைச்சராக பொறுப்பேற்றவர் இபிஎஸ்.
- தமிழகத்திற்கு நியாயமான நிதியை கூட மத்திய அரசு இன்னும் விடுவிக்கவில்லை.
- தமிழகத்திற்கு பாஜக அரசு செய்த திட்டங்களை பிரதமரால் பட்டியலிட முடியுமா?
- தமிழகத்திற்கு அநீதி இழைத்துவிட்டு தேர்தல் வந்ததும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.
- என்டிஏ கூட்டணியினர் தமிழகத்தை பற்றி அவதூறாக பேசுவது வளர்ச்சியை கெடுக்க தான் என்று அவர் கூறினார்.

