7
கோவை, பிப்ரவரி 16:
கோவை மாவட்டத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
ஒவ்வொரு ஆண்டும் ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் பல்வேறு திரை பிரபலங்கள் கலந்துகொள்வர். அவ்வகையில் இந்தாண்டு நடிகைகள் தமன்னா, ஸ்ரீநிதி, சாரா அர்ஜுன் ஆகியோர் கலந்து சிவனை மனமுருகி வேண்டினர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.